ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு நாளை (ஆகஸ்ட் 7) முதல் 10ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா வரும் 9ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவள்ளூா் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு நாளை (ஆகஸ்ட் 7) முதல் 10ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளன.
அரக்கோணத்திலிருந்து 25, திருப்பதியில் இருந்து 75 சிறப்புப் பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னையில் இருந்து 100 சிறப்புப் பேருந்துகளும், காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணிக்கு 100 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: அடிக்கடி 750 மில்லி ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?