போதையில் மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்!

தமிழகம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் வசித்து வருபவர் நாகப்பன். இவருக்கு இரண்டு மகள்கள், மூத்த மகள் ராக்கம்மாளைக் கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

கணவன் மனைவி இருவரும் கோவிலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

ராமச்சந்திரன் தினமும் குடித்து விட்டு வருவதால் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராக்கம்மாளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் ,ராமச்சந்திரன் மனைவியை பார்க்க மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது வீட்டில் இருந்த நாகப்பன், மருமகனை சமரசம் செய்ய முயன்றார்.

ஆனால் முடியவில்லை. வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ராமச்சந்திரனை ஒரு அறையில் தள்ளி பூட்ட முயன்றுள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அந்த அறையில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மாமனார் நாகப்பன் மீது சுட்டார்.

இதில் அவரது கழுத்துக்கு கீழ் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக குன்றக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து மாமனாரை துப்பாக்கியால் சுட்ட ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

எடப்பாடி இருக்க வேண்டிய இடம் வேறு: கோவை செல்வராஜ்

பிரக்ஞானந்தாவை கைதட்டிப் பாராட்டிய மேக்னஸ் கார்ல்சன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *