Several lakhs of rupees of fraud

ஆதிதிராவிடர் நலத்துறையில் பல லட்சம் ரூபாய் முறைகேடு!

தமிழகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட தாசில்தார் உட்பட  17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணிபுரிந்தவர் ரமேஷ். தற்போது ஜமுனாமரத்தூர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றியபோது மலைப்படி நிலுவைத் தொகை மற்றும் இதர நிலுவைத் தொகை போன்ற இனங்களில் போலியாக பட்டியல் தயார் செய்து வேறு நபர்களின் வங்கிக் கணக்குக்கு பல லட்சம் ரூபாய் பற்று வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்தன.

அதன்பேரில் ஆதிதிராவிடர் நல ஆணையரின் நேர்முக உதவியாளர் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் செங்கம் மற்றும் போளூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை செங்கம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார்களாக பணிபுரிந்த ரமேஷ், சுப்பிரமணியன், உதவி கருவூல அலுவலர் சரவணன் உட்பட ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், வீடுகளில் பணிபுரிந்தவர்கள் என மொத்தம் 17 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் அரசு பணத்தை போலி பட்டியல்கள் மூலம் கையாடல் செய்து கூட்டுசதியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் ஆய்வுக்குழு அறிக்கையின் படி தனி தாசில்தாராக பணிபுரிந்த ரமேஷ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி செங்கம் தனிதாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றிய காலமான 1.5.2018 முதல் 28.8.2020 வரையில் உள்ள அனைத்து ஆவணங்களையும் குற்றத்தை மறைக்கும் நோக்கில் அழித்ததாகவும்,  அதற்கு உடந்தையாக இளநிலை வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் குற்றவியல் வழக்கு தொடரவும் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககம் உத்தரவின்படி செங்கம் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் கடந்த 2018 முதல் 2021ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த தாசில்தார்கள் ரமேஷ், சுப்பிரமணியன் உள்பட 17 பேர் மீது திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: லீன் அன்ட் லைட் சாலட்  

வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *