சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று (செப்டம்பர் 30) செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர், “டெங்கு மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
கிராமம், நகரங்கள் என பட்டியல் தயார் செய்து அந்தந்த மாவட்டங்களில் நோய் தடுப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக23 ஆயிரத்து 717 தினசரி தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
உயிர் காக்கும் மருத்துகள் போதிய அளவில் உள்ளது. பள்ளிகள், உணவகங்கள் ,திரையரங்குகள், பூக்காக்கள் திருமண மண்டபங்கள் கல்லூரிகள் தொழிற்சாலைகள்,
ஆகியவற்றில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணியும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் டெங்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன இதுபோன்று டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது, இதனால் நோய் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 740 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 4030 டெங்கு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
2017 ஆம் ஆண்டு 23,906 டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. 65 பேர் டெங்கு காய்ச்சலில் இறந்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவரான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியலில் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே டெங்கு காய்ச்சல் பிரச்சனையை அறிக்கையாக அளித்திருக்கிறார். டெங்கு வாழ்க எடப்பாடி பழனிச்சாமி வாழ்க” என விமர்சித்தார்.
மேலும் அவர், “ஜனவரி முதல் இப்போது வரை 4524 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
15 பேருக்கு நேற்று டெங்கு பாதிப்பு கண்டறியபட்டுள்ளது தற்போது 363 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர், தேவையற்ற பதற்றம் தேவை இல்லை
தமிழகத்தில் 363 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் சென்னையில் 54 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளை ஒரே நாளில் 1000 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
காய்ச்சல் வந்தால் உடனடியாக ரத்தம் பரிசோதனை செய்ய வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார் மா.சுப்பிரமணியன்.
முன்னதாக டெங்கு போன்ற விஷக் காய்ச்சலை தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
பின்னால் வந்த பைக்… திடீரென திறக்கப்பட்ட கார் கதவு… பறிபோன உயிர்!
கூட்டணி முறிவு: கருப்பண்ணன் கருத்துக்கு கே.பி.முனுசாமி மறுப்பு!