பொதுத்துறை சார்பில் குடியரசு தின விழா 2023 அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட படைப்பிரிவு மற்றும் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 11) வழங்கினார்.
இந்தியா முழுவதும் குடியரசு தினம் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பொதுத்துறை சார்பில் இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட மத்திய ரிசர்வ் காவல் படை, ராணுவ படை , தமிழ்நாடு பேரிடர் நிவாரண படை, தேசிய மாணவர் படை பிரிவுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து குடியரசு தின விழா நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்த இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், பொதுத்துறை இணை செயலாளர் அனுஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
பணி நியமன ஆணை தாமதம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
துருக்கி சிரியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!