நாளை தொடங்கும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு: முழு விவரம் இதோ!

தமிழகம்

தமிழ்நாட்டில் 8,51,303 மாணவர்கள் எழுதும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு நாளை (மார்ச் 13) தொடங்குகிறது.

ப்ளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (மார்ச் 14) முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக ப்ளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 51,303 மாணவர்களும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 88,064 மாணவர்களும் என மொத்தம் 16 லட்சத்து 39,367 பேர் எழுத இருக்கின்றனர்.

புதுச்சேரியில் 29,086 பேர் 11 மற்றும் ப்ளஸ் டூ வகுப்பு தேர்வை எழுதுகின்றனர்.

இதில் ப்ளஸ் டூ வகுப்பு தேர்வுக்காக 3,225 மையங்களும், 11ஆம் வகுப்பு தேர்வுக்காக 3,224 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அறை கண்காணிப்பாளர்களாக 90 ,070 பேரும், பறக்கும் படை உறுப்பினர்களாக தலா 3,100 பேரும், நிலையான படை உறுப்பினர்களாக 2,269 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாணவர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.

விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது.

தவிர, விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது.

மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும்.

அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

தேர்வெழுத இருக்கும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சிறப்பு அறிவுரைகளுடன் அச்சிடப்பட்டு இருப்பதாக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வினாத்தாள், விடைத்தாள்களில் அச்சிடப்படும் இந்த அறிவுரைகள் தேர்வுக்கு முன்னதாகவே ஹால் டிக்கெட்டில் இந்த முறை அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்வுகளுக்கு 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களும், ஆசிரியர்களும் தேர்வு அறைகளில் செல்போன் எடுத்துவர அனுமதி கிடையாது.

இந்த அறிவுரையை மீறி தேர்வர்களோ, ஆசிரியர்களோ செல்போன் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும்.

9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வு துறை அறிவித்துள்ளது.

ப்ளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தடையில்லாத மின்சாரம் வழங்குவதன் மூலம் மாணவர்கள், எந்தவித அச்சமும் இன்றி தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

எத்தனையோ பூச்சாண்டிகளைப் பார்த்தவன் நான்: முதல்வர் ஸ்டாலின்

அறுபதிலும் ஆசை வரும் : திரையுலகை கலக்கும் நட்சத்திர ஜோடி!

Plus Two Public Exam
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *