பிள்ளைகளுக்கு எழுதிவைத்த சொத்துக்களை திரும்பப் பெறலாமா? உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

சமுதாயம் தனது பொதுப் பண்புகளை வேகமாக இழந்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்,  கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர், தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தார்.

ஆனால், வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார்.

அதில் இன்று (அக்டோபர் 8) தீர்ப்பளித்த அவர், நகைகளை விற்றும், சேமிப்புகளை கரைத்தும், தங்கள் மருத்துவ செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என விமர்சித்தார்.

கடந்த 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி,

கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.

மேலும், தந்தை மகற்காற்றும் உதவி… என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய நீதிபதி, சமுதாயத்தின் பொது பண்புகளை இந்த குறள் எதிரொலிப்பதாகவும், தற்போது  சமூகம் இந்த மதிப்பின் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

கலை.ரா

வளர்ப்பு நாயைக் கொன்றதாக ட்வீட்: எச்.ராஜாவை விசாரிக்க உத்தரவு!

தங்கம் விலை உயர்ந்தது : வெள்ளி விலை குறைந்தது!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts