படை எடுக்கும் வடமாநிலத்தவர்கள்: கண்காணிக்குமா தமிழக அரசு?

தமிழகம்

வடமாநிலத்தவர்களின் தமிழக வருகை அண்மைக்காலங்களாகவே அதிகமாகி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட இந்திய தொழிலாளர்கள் சாரை சாரையாக வரும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி விவாதப்பொருளாகி உள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் ரயில்வே, அஞ்சல் துறை, அனல்மின் நிலையங்கள், வருமானவரித் துறை, உளவுத் துறை, வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் பொதுப்பணித்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்காமல் வடமாநிலத்தவர்களுக்கே அதிகம் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் குக்கிராமங்களில் இருக்கும் அஞ்சல் அலுவலகங்களில் கூட ‘போஸ்ட் மாஸ்டர்’ பணிக்கு தமிழ் மொழி தெரியாத பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலத்தவர்களே அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

அவ்வளவு ஏன், தமிழ் நாட்டின் சட்டப் பேரவை நடக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் அஞ்சலகத்திற்கு சென்றால்கூட வட இந்தியர்தான் இருக்கிறார். தமிழில் விலாசம் எழுதினாலோ அல்லது தமிழில் ஏதாவது கேட்டாலோ அவர்களுக்குப் புரிவதில்லை. ஆனாலும் அவர்கள்தான் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

northindians in tamilnadu

தமிழகத்தில் தலைமைப் பதவியில் ஒரு வட இந்தியர் அமர்த்தப்பட்ட பிறகு, அடுத்த கட்டமாக அவரது பரிந்துரையின் பெயரில் அவருக்கு கீழே உள்ள அனைத்துப் பதவிகளிலும் வட இந்தியர்கள் அமர்த்தப்பட்டு விடுகின்றனர்.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 1,600 பேர் வட இந்தியர்களாவர்.

இது மட்டுமின்றி சென்னை பெரம்பூர், கோவை என ரயில்வே பணிகளில் பிற மாநிலத்தவர்கள் 90 விழுக்காடு பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கன்ட் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து ரயில்வே வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தேர்வு நடத்தி டிராக்மேன், போர்ட்மேன் போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானோரைப் பணியில் சேர்த்தனர்.

ஆனால், ரயில்வே ஆக்ட் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்து சுமார் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து பல ஆண்டுகளாக தமிழகத்தில் காத்திருக்கின்றனர். இதில், வேலை கிடைக்காத விரக்தியில் 28 பேர் உயிரை இழந்துள்ளனர்.

northindians in tamilnadu

இது ஒருபுறமிருக்க மறுபுறம், கடந்த அக்டோபர் மாதம் ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவன பணித் தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 இளம்பெண்கள் ஜார்க்கன்டிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளுக்காகக் குடியேறிய வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் அதிகம் என்று நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநிலத்தவர் விரைவாகக் குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று பெற்று நிரந்தரமாகக் குடியேறுகின்றனர். மேலும், வாக்காளர் அட்டையும் பெறுவதால் தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாகவும் வட மாநிலத்தவர்கள் உருவெடுத்து வருகின்றனர்.

northindians in tamilnadu

இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் யாவும் பறிக்கப்படுவதோடு மட்டுமின்றி எஞ்சியுள்ள அரசியல் அதிகாரத்தையும் வடமாநிலத்தவர்களிடம் முற்றாக இழந்து, தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே உடைமைகள், உரிமைகளற்ற அகதிகளாக, அடிமைகளாக வாழும் அவலநிலைக்குத் தள்ளப்படுவார்களே என்ற வேதனை அனைவரிடத்திலும் இருக்கிறது.

அதே நேரம், ஆந்திரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதுபோல் தனியார் நிறுவனங்களிலும் 80 விழுக்காடு வேலையினை தமிழர்களுக்கே ஒதுக்கத் தனிச் சட்டமியற்ற வேண்டுமென்றும்,

தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும்,

அவர்கள் தமிழ்நாட்டில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை பெறுவதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமெனவும்,

கடந்த அக்டோபர் மாதம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், வட மாநிலத்தவர்களின் தமிழக வருகையை தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கால்பந்து உலகக்கோப்பை: கானாவை வீழ்த்திய போர்ச்சுகல்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
5
+1
6
+1
16
+1
57
+1
9
+1
5
+1
13

9 thoughts on “படை எடுக்கும் வடமாநிலத்தவர்கள்: கண்காணிக்குமா தமிழக அரசு?

  1. 100 க்கு 100 உண்மை. நேற்று (25.11.2022) சென்னை எக்மோர் ரயில நிலையத்தில் வந்த ஹவ்ரா – திருச்சி ரெயிலில் அவ்வளவு பேர் தொங்கியபடி வந்து இறங்கினர். இது தினமும் நடக்கிறது. இது போல் வட இந்தியாவில் இருந்து வரும் தினசரி ரெயில்களில் வரும் வட நாட்டவர் அனைவருக்குமே வேலை கிடைத்து வருகிறார்களா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? ஆனால் நம்மவர்களுக்கு இங்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. சிலர் சில காரணங்களை சொல்கிறார்கள்.

    1. குறைந்த ஊதியம்
    2. அதிக நேரம் வேலை
    3. கிடைத்த இடத்தில் தங்கிக் கொள்வது
    4. யூனியன் மற்றும் அரசியல் தலையீடு இல்லை.
    5. புகார் தெரிவிப்பது இல்லை.
    6. எந்த வேலை சொன்னாலும் செய்வது.
    7. குடும்பச் சூழ்நிலை
    8. அதிக விடுப்பு கிடையாது
    இப்படி பல.
    ஆனால் எதிர்காலத்தில்
    1. யூனியன் வரும். தற்போதே திருப்பூர் அருகில் நம்மவர்களை வேலைக்கு அமர்த்த கூடாது என்று எதிர்ப்பு.
    2. திருட்டு, கொள்ளை மற்றும் கொலை செய்து விட்டு வட நாட்டிற்கு ஓடி ஒளிவது
    3. அரசு விதிமுறைகளை தொடர வேண்டிய கட்டாயம் வரும். உதாரணமாக குறைந்த பட்ச ஊதியம் ESI EPF GPF இதெல்லாம் மத்திய அரசு அலுவலகங்கள் மூலம் அழுத்தம் வரும். அப்போது நம் முதலாளிகள் திணருவார்கள்
    4. 240 நாட்களுக்கு பிறகு வேலை நிரந்தரம்
    5. ஆனால் இவர்கள் மூலம் அரசுக்கு ஒரு வருமானமும் இல்லை.
    6. தற்போது இவர்களுக்கு இலவச கோதுமை குறைந்த விலையில் பருப்பு சமையல் எண்ணெய் இலவச மருத்தவ வசதி
    7. இலவச கல்வி
    8. தற்போது கலப்பு திருமணமும் ஆரம்பித்து விட்டது.
    9. இங்கே சம்பாதித்து அவர்கள் மாநிலத்தில் சொத்து வாங்குகிறார்கள். எனக்கு தெரிந்து கோரை பாய் கால் மிதியடி விளக்கமாறு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பர்னிச்சர்ஸ் மின் சாதன பொருட்கள் வியாபாரம் வட மாநிலத்தவரே அதிகம். குறைந்த வட்டியில் பொது துறை வங்கி மூலம் (முத்ரா லோன்) அல்லது அவர்கள் இனமே குறைந்த வட்டியில்.

    அரசு தமிழர்களுக்கு என்று ஏதாவது செய்ய வேண்டும், வெறுமனே திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டிருக்க கூடாது. தற்போது பிராமணிய அல்லது ஆரிய எதிர்ப்பை விட இன்று நமக்கு தேவை தமிழா பாதுகாப்பு மட்டுமே. திராவிடன் என்று கன்னடியர் தெலுங்கர் மற்று மலையாள மக்களை கூட்டு சேர்க்க வேண்டாம். அவர்களுக்கு அவர்களின் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பே போதுமானது. அங்கே அவர்கள் தமிழர்களை கூட்டு சேர்ப்பதில்லை.

  2. மணியரசன் ஐயா பழ. நெடுமாறன் ஐயா உள்ளிட்டத் தமிழ்த் தேசியத் தலைவர்களும் தமிழ்த் தேசியக் கருத்தியலை முன்னிறுத்தி ஓட்டு அரசியல் தேர்தல் களத்தில் களமாடிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானும்தான் இந்தச் சிக்கலின் ஆழத்தைப் புரிந்துகொண்டு தமிழர்களுக்காகப் போராடிவருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பல ஆண்டுகளாகச் சுவைத்து வரும் திராவிடக் கட்சிகளுக்கு இதுபற்றித் துளியும் அக்கறை இல்லை. ஊழல் முறைகேடுகள் இலஞ்சம் தரகு சொத்து சேர்ப்பது இவைதான் அவர்களின் இலக்கே தவிர மக்கள் நலன் இல்லை. தேசியக் கட்சிகள் குறிப்பாக பாஜக எடுத்துள்ள இறுதி ஆயுதம் தான் இந்த வட இந்தியர்களின் திணிப்பு. இந்தியைத் திணிக்க முடியாத அவர்கள் இந்திக்காரர்களை வெற்றிகரமாகத் திணிக்கிறார்கள். தங்களுக்கான ஓட்டுவங்கியை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் பலவற்றை ஏற்கனவே இழந்துவிட்டோம். மிச்சமிருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் ஒரே வாய்ப்பு நாம் தமிழர் கட்சியைச் சீமானை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதுதான்

  3. ஒவ்வொரு மாதமும் இவர்கள் மூலமாக கோடி கணக்கா தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் வடநாட்டுக்கு செல்கிறது.

  4. தவறிக்கூட தமிழ்நாடு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க இடஒதுக்கீடு சட்டம் திமுக அரசு கொண்டுவராது, காரணம் மற்ற மாநிலங்களில் அவர்களின் குடும்ப பிழைப்பு கெட்டு போய்விடும், தமிழர்கள் ரோசம்,மானம் இல்லாதவர்கள் என்று தெளிவாக தெரிகிறது. கடந்த வருடம் போத்திஸ் ஜவுளிக்கடை கர்நாடகாவில் தொடங்கப்பட்ட போது தமிழர்களை பணிக்கு அமர்த்தினர்கள் ஆனால் கன்னடர்கள் அவர்களை சேர்க்காமல் கடை திறக்க கூடாது என்று போராடினார்கள் எனவே கடை திறக்க முடியாமல் கடைசியில் அவர்களை வேலைக்கு சேர்த்த பின்தான் கடை திறக்க முடிந்தது ஆனால் இங்கு டாஸ்மாக் பயனால் தமிழர்கள் மானம், ரோசம் இழந்து வேலை வாய்ப்பையும் இழக்கிறார்கள்

  5. தமிழர்களின் வேலைசெய்யும் திறன் அதிகரித்ததால் கீழ்நிலை வேலைக்கு ஆளில்லை. ஆகவே அந்த வெற்றிடத்தை நிரப்ப இவர்கள் தேவை. பல தொழில் முனைவோருடன் கேட்டு பாருங்கள். வேலைக்கு வரும் நம்மவர்கள் தரும் பிரச்சன புரியும்

  6. இவர்கள் அனைத்து இடங்களிலும் சிக்னலில் பிச்சை எடுப்பவர்கள் முதற்கொண்டு பலூன் விற்பவர்கள்., போர்வை விற்பவர்கள், மார்வாடி கடைகள் , பெரிய கடைகள் என அனைத்து இடங்களிலும் பரவியுள்ளன.. இந்தியை மட்டும் திணிக்காமல். ; இந்தி பேசுபவர்களை தமிழ்நாட்டில். திணிக்கின்றனர்.

  7. மிகைப்படுத்தப்பட்ட தகவல். உதாரணம் தமிழக மேற்கு மாவட்டங்களில் ஒரு கோடி வட இந்தியர்கள் கடந்த சில ஆண்டுகளுக்குள் குடியேறி உள்ளதாக சீமான் பெயரிலான தகவல்.

Leave a Reply

Your email address will not be published.