நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத் திருவிழா இன்று (ஜூலை 12) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் கடந்த வாரம் விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
4-ம் நாள் திருவிழாவான காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
21-ந் தேதி மாலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் அம்பாள் சன்னதி முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
அன்று அம்பாள் கர்ப்பிணி போல் அலங்கரிக்கப்படுவார். வயிற்றில் முளைக்கட்டிய பாசிபயிற்றை கட்டி வைத்து அம்பாளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும். சீமந்தம் சீர்வரிசைகள் செய்து அனைத்து வகை பலகாரங்களும் படைக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.
இதில் கலந்து கொண்டு அம்பாள் மடியில் கட்டப்பட்ட முளைக்கட்டிய பாசிப்பயிரை வாங்கி சாப்பிடும் திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆகையால் அன்றைய தினம் ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
தீபாவளி விடுமுறை: அசுர வேகத்தில் முடிந்த டிக்கெட் முன்பதிவு!