நீட் குளறுபடி: தேர்வுத்தாளை ஆய்வு செய்ய மாணவிக்கு அனுமதி!

தமிழகம்

நீட் விடைத்தாளில் குளறுபடி நடந்திருப்பதாக புகார் எழுந்ததால் தேர்வு எழுதிய மாணவி அவரது தேர்வுத்தாளை நேரில் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெயசித்ரா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், பிளஸ் டூ முடித்துவிட்டு இந்த வருடம் மருத்துவ படிப்பிற்கான தேசிய திறனாய்வு நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுதி இருந்தேன்.

அந்த தேர்வில் 200 கேள்விகளுக்கு 141 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி இருந்தேன்.

நீட் தேர்வு முகமை, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் ஓஎம்ஆர் சீட் மற்றும் கேள்விக்கான அனைத்து பதில்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது.

அதில் எனக்கு 720 மதிப்பெண்களுக்கு 564 மதிப்பெண்கள் சரியாக இருந்தது. ஆனால் கடந்த 7 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அதில் எனக்கு 114 மதிப்பெண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. சதவிகித படி 48.8% கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குளறுபடி உள்ளது. எனவே நான் எழுதிய நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்.

அதன்படி எனது பழைய மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய மதிப்பெண் பட்டியல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த நீதிபதி, தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் இடம் பெற முடியும் என்ற காரணத்தினால் மாணவியின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கின்றது என்றார்.

எனவே மாணவி, தான் எழுதிய நீட் தேர்வின் விடைத்தாள்  ஓஎம்ஆர் சீட்டை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

கலை.ரா

நீட் தேர்வு : தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு!

வேளச்சேரி பாலம் திறப்பு: நிம்மதி பெருமூச்சு விட்ட வாகன ஓட்டிகள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0