முதலமைச்சர் தொடங்கி வைத்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதி அளித்திருக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளையும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசின் பங்களிப்பு மட்டும் அல்லாமல் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்பட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து, நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தையும், பவுண்டேஷனையும் முதலமைச்சர் இன்று(டிசம்பர் 19)தொடங்கி வைத்தார்.
இதற்கு முன்னாள் மாணவர்கள் தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வரவேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5லட்சத்தை நம்ம ஸ்கூல் திட்டத்திற்கு முதல்வர் வழங்கினார். அனைத்து அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் இதற்கு தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அசோக் லைலாண்ட் நிறுவனம் ரூ. 19 கோடியும், எல்&டி நிறுவனம் ரூ. 11 கோடியும், ஐ.ஓ.சி ரூ. 4 கோடியும், கேபிடல் லேண்ட் ரூ. 3.8கோடியும், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் ரூ. 2.78 கோடியும், ஹூண்டாய் நிறுவனம் 2 கோடி ரூபாயும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு நன்கொடையை வழங்கி இருக்கின்றன.
கலை.ரா
குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்தார் சுந்தர் பிச்சை!
ஹிஜாப்புக்கு எதிர்ப்பு – கைதான ஆஸ்கர் பட நாயகி : யார் இவர்?