சென்னை சங்கமம்… கிராமியக்‌ கலைஞர்களுக்கு ஸ்டாலின் குட் நியூஸ்!

Published On:

| By Selvam


‘சென்னை சங்கமம்‌ – நம்ம ஊரு திருவிழா’ கிராமியக்‌ கலைஞர்களுக்கு ஒரு நாள்‌ ஊதியம்‌ ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“முதலமைச்சர்‌ ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க
தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும்‌ ‘சென்னை சங்கமம்‌ – நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது.

இந்தாண்டிற்கான சென்னை சங்கமம்‌ – நம்ம ஊரு திருவிழா
நிகழ்ச்சியினை ஜனவரி 13 அன்று முதலமைச்சர்‌ தொடங்கி வைத்தார்.

சென்னையில்‌ உள்ள 18 இடங்களில்‌ நான்கு நாட்கள்‌ நடைபெறும்‌ இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப்‌ பெற்று
வருகிறது.

சென்னை சங்கமம்‌ – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில்‌ தற்போது 1500 கிராமியக் கலைஞர்கள்‌ பங்கேற்றுள்ளனர்‌. இவர்கள்‌ 75 கலைக்‌ குழுக்களாக பிரிந்து 5 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருதின்றனர்‌.

சென்னை சங்கமம்‌ – நம்ம ஊரு திருவிழாவில்‌ பங்குபெறும்‌ கிராமியக்‌ கலைஞர்களுக்கு தங்கும்‌ இடம்‌, உணவு, 2 உடைகள்‌, போக்குவரத்து வசதிகள்‌ உட்பட அனைத்தும்‌ தமிழ்நாடு அரசால்‌ இலவசமாக வழங்கப்பட்டுள்ளது .

இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ ஒரு நாள்‌ ஊதியம்‌ ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர்‌ ஆணையிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

தை மாத நட்சத்திர பலன்கள்: பூரம்

நல்லவேளை தப்பிச்சிட்டேன்… அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel