விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை இன்று (ஆகஸ்ட் 31) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் உரிய நேரத்திற்கு சென்றடைய முடியும் என்பதால் பெரும்பாலான மக்களின் தேர்வாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை சென்ட்ரல் மற்றும் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக சின்னமலையில் இருந்து ஆலந்தூர் வரை ஒற்றை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது.
Dear Sir/Madam,
Due to technical issue, single line operation is being undertaken from Little Mount to Arignar Anna Alandur Metro. Normal services are presently being operated from Wimco Nagar Depot to Little Mount in Blue Line.Short Loop service has been planned between…
— Chennai Metro Rail (@cmrlofficial) August 31, 2023
விம்கோ நகர் டெப்போவில் இருந்து நீல வழித்தடத்தில் உள்ள சின்ன மலை வரையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்குவதில் பிரச்சினை. பயணிகள் அவதி. விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மெட்ரோ ரயில்கள் அனைத்தும் தாமதம்….#Chennai #Metro #Rail pic.twitter.com/TJtcFazP3k
— SUBRAMANIAN.R (@subukarthiK_jou) August 31, 2023
தற்போது பணிக்கு செல்லும் நேரம் என்பதால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மோனிஷா