கரையை கடக்க தொடங்கியது மாண்டஸ் புயல்!

Published On:

| By Kavi

மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தற்போது, மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 14 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் மாண்டஸ் புயலின் வெளிப்புறப்பகுதி 9.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி மையப்பகுதி 11.30 மணிக்கு கரையை கடக்கும் நிகழ்வு நடைபெறும்.. பின்புற வெளிப்பகுதி அதிகாலையில் கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரியா

150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கம்: எலான் மஸ்க்

ஈசிஆரில் இரவு போக்குவரத்து நிறுத்தம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment