மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால், கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையை எதிர்கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.
தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேருந்து நிறுத்தங்களில் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரியா
” தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள்”– மாண்டஸ் புயல் அலர்ட்!
புயல் எச்சரிக்கை: 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!