காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது.
இதனால் இன்று நள்ளிரவு வரை காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து கொண்டே இருக்கும்.
தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கி வருவதால் வட தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை!
இன்றும், நாளையும் ஆந்திர கடலோர பகுதி, தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
குறிப்பாக இலங்கை கடலோரப் பகுதி, தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
FIFA WorldCup : வருவாய் அதிகரிக்க நெத்தியடி கணக்கு போடும் கத்தார்
அழகிரிக்கு எதிராக கார்கே, சோனியாவிடம் டெல்லியில் புகார்!