காய்கறிகளின் விலை உச்சத்தைத் தொட்டுவிடும்போது… ‘எந்தக் காய்கறியை வாங்கி சமைப்பது?’ என்று குழம்புபவர்கள், சத்தான இந்தக் கீரைக்கூட்டு செய்து அசத்தலாம். அரைக்கீரை கண்ணுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் நல்லது. அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
அரைக்கீரை – ஒரு கட்டு
தேங்காய் துருவல் – ஒரு கப்
கடுகு – கால் டீஸ்பூன்
சீரகம், உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
பாசிப்பருப்பு – 100 கிராம்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, தண்ணீர் வடிய விட்டு பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை லேசாக வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிடவும். நறுக்கிய கீரையுடன் தேவையான உப்பு கலந்து நன்றாக வேக வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, வெந்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, பெருங்காயத்தூள் சேர்த்து, கடுகு தாளித்து இறக்கவும்.
“தாக்குதலுக்கு பயப்பட மாட்டோம்”: ஐடி இயக்குனர் சிவசங்கரன்
வெளுத்து வாங்கும் மழை: ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுமா?