முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் திமுக சார்பில் சென்னையில் மாராத்தான் போட்டி இன்று (ஆகஸ்ட் 7) நடைபெறுகிறது. 4 பிரிவுகளின் கீழ் இந்த போட்டியானது நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளை அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, சி.வீ மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ., ஆகிய பிரிவுகளின் இந்த போட்டியானது நடைபெறுகிறது. நாற்பத்து மூன்றாயிரத்து 231 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
கலைஞரின் நினைவிடத்தில் இந்த தொடங்கிய மாரத்தான் போட்டி பட்டிணப்பாக்கம், பெசண்ட் நகர் வழியாக மீண்டும் கலைஞர் நினைவிடத்தில் முடியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாராத்தான் போட்டியானது ஆசியன் புக் ஆஃப் ரெக்காட்ஸ் புத்தகத்தில் இடம்பெற போகிறது.
மாராத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிகள் வழங்கினார்.
சிறப்புக் கட்டுரை: நவீன சென்னையை வடிவமைத்த கலைஞர்!