மீனவர்கள் இன்றும், (பிப்ரவரி 17) நாளையும் (பிப்ரவரி 18) கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பிப்ரவரி 17, பிப்ரவரி 18 தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். தமிழகத்தின் உள்பகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் இருக்கக்கூடும்,” என்று தெரிவித்துள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவசாயி சின்னம் கிடைக்குமா? – நீதிமன்றம் ஏறும் சீமான்
மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம்… எந்த டீம்லன்னு பாருங்க!