கனமழை: நாளை எத்தனை மாவட்டங்களுக்கு விடுமுறை?

தமிழகம்

கன மழை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ஆம் தேதி துவங்கியது. இதனால் கடந்த வாரம் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது.

இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது வலுப்பெற்று புதுச்சேரி, தமிழக பகுதிகளின் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் நாளை கன மழை பெய்யக்கூடும். கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தாயுடன் பிராங்க் செய்த மகள்: அதிர்ச்சியில் முடிந்த நகைச்சுவை!

இயக்குநர் ராம்-நிவின் பாலி கூட்டணியின் புதிய அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *