தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 17) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல். தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 19 முதல் 21 வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் பலத்தக் காற்று விசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மோனிஷா
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்!