இன்றும், நாளையும் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Published On:

| By christopher

heavy rain in 14 districts of tamilnadu

தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 5) நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

12 மாவட்டங்களில் கனமழை!

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடதமிழகம்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதியில்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

அதன்காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம்‌, நாமக்கல்‌, தேனி, கரூர் மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மிதமான மழை!

சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை
31-32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

கேரளா – தெற்கு கர்நாடகா மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 48 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுகிறார்கள்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சிவில் நீதிபதி பணிக்கான முதன்மை தேர்வில் குளறுபடியா?: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

தொடர்ந்து நழுவும் சதம்… பிறந்தநாளில் சச்சின் சாதனையை எட்டுவாரா கோலி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel