heat will increse in tamilnadu

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை எச்சரிக்கை!

தமிழகம்

தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நேற்று (மே 14) மதியம் வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர மோகா புயல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடந்தது.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று முதல் மே 17 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையில் வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 – 30 டிகிரி செல்ஷியஸ் ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் பலத்தகாற்று மணிக்கு 45முதல் 55கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று முதல் மே 17வரை தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40முதல் 45கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி

விழுப்புரம் மாவட்டத்திற்கு விரைந்த முதல்வர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *