சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ஏராளமான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
அரும்பாக்கத்தில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தங்கநகைக் கடன் பிரிவில் இன்று (ஆகஸ்ட் 13) பிற்பகல் முகமூடி அணிந்து நுழைந்த 3 கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சில கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. வங்கியின் முன்னாள் ஊழியரே கொள்ளையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கலை.ரா
திருவள்ளுவர் வடிவில் பறந்த பட்டம்: மீண்டும் கவனத்தை ஈர்க்கும் மாமல்லபுரம்!