சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 20) சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
அக்டோபர் மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 43 ஆயிரத்திற்கு கீழ் விற்பனையானது. ஆனால் மீண்டும் படிப்படியாக விலை உயர்ந்து தங்கம் விலை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,680-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.5,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள வேளையில், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.77,500-க்கும் ஒரு கிராம் ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா