செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளின் ரூ.3.37 கோடி சொத்துகள் முடக்கம்!

தமிழகம்

தமிழ்நாடு செஞ்சிலுவை சங்க கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையில் நடந்த நிதிமுறைகேடு தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதியில் சிபிஐ இந்திய தண்டனைச் சட்டத்தின் 120(B) பிரிவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13(2) r/w பிரிவு 13(1)(a) ஆகியவற்றின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, நிதி நிறுவனம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் செஞ்சிலுவை சங்க தமிழக கிளையின் தலைவர் ஹரிஷ் எல்.மேத்தா, முன்னாள் பொருளாளர் செந்தில்நாதன், முன்னாள் பொதுச்செயலாளர் எம்.எஸ்.எம்.நசுருதீன் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களுக்கு சொந்தமான ரூ.3.37 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டீ குடித்து விட்டு காசு கொடுக்காத பாஜக எம்.எல்.ஏ!

சிவசங்கர் பாபாவுக்கு நெருக்கடி: வழக்கு ரத்தான உத்தரவு வாபஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *