விவசாயிகளின் விளைபொருட்களின் விற்பனைக்கு இ-நாம்!

Published On:

| By christopher

இ-நாம் செயலி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தச் செயலி மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை பல்வேறு பகுதியில் உள்ள விற்பனையாளர்களுக்கும் விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யலாம். மேலும் பாதுகாப்பான பணி பரிவர்த்தனையையும் உறுதி செய்ய முடியும். இந்த இ-நாம் திட்டத்தில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்து மேலும் பயன் பெறலாம் என திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைத்து, எங்கிருந்தும் விளைபொருள்களை விற்பனை, கொள்முதல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூா், உடுமலை, பெதப்பம்பட்டி, வெள்ளக்கோவில, மூலனூா், மடத்துக்குளம், காங்கயம், பொங்கலூா், சேவூா் ஆகிய ஒன்பது ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. துல்லியமான தர அளவுகள் உறுதி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கிறது. மேலும், இ-நாம் திட்டத்தில் பண்ணை வாயில் வணிகம் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவுகளை குறைக்கும் வகையில் விவசாயிகளின் இருப்பிடத்துக்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா்கள் சென்று இ-நாம் செயலி மூலம் விளைபொருள்களை விற்பனை செய்து தருகின்றனா். இதற்கான பணமும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, திருப்பூா் மாவட்ட விவசாயிகள் அனைவரும் அந்தந்தப் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம் மூலம் விளைபொருள்களை விற்பனை செய்து பயன்பெறலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்

பிரபாஸ் உடன் போட்டியிடுகிறாரா சிவகார்த்திகேயன்?

ஜி-20 மாநாடு: நாளை முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை!