சென்னை உயர்நீதிமன்ற 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்தது. கொலிஜியம் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
செல்வம்
குட்கா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!