தேவநாதன் வழக்கு… விரைவில் ED விசாரணை : நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் ஆகியோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெண்ட் பண்ட் லிமிடட்’ நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் இருந்து ரூ.525 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குணசீலன், மகிமைநாதன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் 500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதால் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முதலீட்டாளர்கள் நலச்சங்கத் தலைவரான சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியன் மற்றும் எம். ஜோதிராமன் அமர்வில் இன்று (நவம்பர் 27) விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, “இந்த விவகாரத்தில் அமலாகக்த் துறைக்கு கிடைத்த தகவல்கள் மூலம் வழக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இதையடுத்து தேவநாதன் விவாகரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

”மோடியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்” : ஏக்நாத் ஷிண்டே பேச்சால் கட்சிக்குள் அதிருப்தி!

ஃபெங்கல் புயல் நகர்வை எளிதாக கண்காணிக்கலாம்… எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0