சென்னை – நெல்லை சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு!

Published On:

| By Minnambalam

சென்னை தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்துக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்படும் வாரந்திர சிறப்பு கட்டண ரயில் (எண்.06004).

இந்த மாதம் 18, 25, அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

மேலும் நவம்பர் மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ஜனவரி மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும்.

இந்த ரயில் திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
இதேபோல தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 10.20 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

இந்த ரயில் வருகிற 19, 26, அக்டோபர் மாதம் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும் நவம்பர் மாதம் 7, 14, 21, 28 தேதிகளிலும், டிசம்பர் மாதம் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும்.

தென்மாவட்டத்துக்குச் செல்லக்கூடியவர்கள் சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணிக்க இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-ராஜ்

திருச்சியில் புதிய மின்சார ரயில் பராமரிப்பு முனையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel