சென்னையின் புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நகர்ப்பகுதிகளுக்கு வரும் மக்களுக்கு மின்சார ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பணிக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்காணோர் மின்சார ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
இந்தநிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே வரும் நவம்பர் 17-ஆம் தேதி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை தாம்பரம் – கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படாது.
அதற்குப் பதிலாக பல்லாவரம் – சென்னை கடற்கரை இடையே ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பயணிகள் கூட்டத்தை சமாளிக்க தாம்பரம் – பல்லாவரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ. 6,000 கோடிக்கு ரூ.60 கோடி கூட வரல: ஸ்டாலினை டேக் செய்து அண்ணாமலை பதிவு!
அனுமதி இல்லாமல் ஆடியோ நாவல்… யூடியூப் சேனல் முடக்கம்… ராஜேஷ்குமார் வார்னிங்!