முதல்வரைச் சந்திக்கும் வரை போராட்டம் தொடரும்: ஆசிரியர் சங்கம்

தமிழகம்

”முதல்வரைச் சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும்” என ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று (டிசம்பர் 30) நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷாவுடன் நேற்று (டிசம்பர் 29) நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில்,

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால் இந்த பேச்சுவார்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட், ”அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை.

முதல்வரைச் சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும். முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்: பிசிசிஐ வெளியிட்ட தகவல்!

கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: மாதிரி படம் வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *