2023 ஜனவரி மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 66 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் பொங்கல் விடுமுறைக்கு முதல் நாள் ஜனவரி 13ஆம் தேதி அன்று மட்டும் 2.66 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட நடப்பு 2023 ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 48,121 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் 1.1.2022 முதல் 31.12.2022 வரை மொத்தம் 6,09,87,765 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13.1.2023 அன்று 2,65,847 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2023, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21,96,536 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
பயண அட்டைகளை பயன்படுத்தி 39,54,733 பயணிகள் பயணித்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில்களில் வேகமாகப் பயணிக்க நெரிசல் நேரத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுவதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கடைசி டி20 : வரலாற்று வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!