19 தமிழக மீனவர்கள் கைது!

Published On:

| By Monisha

19 tamilnadu fishermans arrested

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 19 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மீனவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவ்வப்போது போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தை சேர்ந்த 19 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் (செப்டம்பர் 12) 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் அதிலிருந்த 13 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடித்தனர்.

இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு படகு மற்றும் அதிலிருந்த 6 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர் மற்றும் கூடுதல் விவரங்கள் இலங்கை கடற்படை விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.

மோனிஷா

ENGvsNZ: அதிரடி கம்-பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்… இங்கிலாந்து அபார வெற்றி!

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: 14 பேருக்கு பாதிப்பு… 2 பேர் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel