காபி நிலையம் அமைக்க கடனுதவி!
ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிதாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தொழில் தொடங்க காலியிடமோ அல்லது கட்டடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலும் விலக்கு அளிக்கப்படும்.
விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவிகிதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இந்தத் தொழிலை செயல்திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்த நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.
18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தொழிலுக்கு ரூ.6.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை திட்டத்தொகையை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் எனவும், பழங்குடியினருக்கு 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 முதல் 10 சதவிகிதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி மீதம் உள்ள தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை!
உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!