கோல்ட் காபி, பலாப்பழ ஐஸ் கிரீம், பாஸந்தி, உள்பட 10 புதிய பால்பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறது ஆவின் நிறுவனம்.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆவின் நிறுவனம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு தரம் வாய்ந்த பொருட்களை வழங்கி பால் விற்பனையில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அதிலும் அண்மைக்காலமான ஏராளமான புதிய உணவுப்பொருட்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது ஆவின் நிறுவனம்.
ஆவின் நிறுவனத்தில் புதிதாக பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒயிட்னர் போன்ற புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆவின் நிறுவனம் மூலம் 1 லிட்டர் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்களும், சத்துமாவும் விற்கப்படும் என்றும் அத்துறை அமைச்சர் நாசர் உறுதியளித்தார்.

இந்த நிலையில் நுகர்வோரின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆவினில் தற்போது 150 உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் இன்னும் கூடுதலாக 10 புதிய பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
1. பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream)
2. வெள்ளை சாக்லேட் (White Chocolate )
3. குளிர்ந்த காஃபி (Cold Coffee)
4. வெண்ணெய் கட்டி (Butter Chiplets)
5. பாஸந்தி (Basundi)
6. ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix)
7. பாலாடைக்கட்டி (Processed Cheese ) 8. அடுமனை யோகர்ட் (Baked Yoghurt)
9. ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit)
10.ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku )
பத்து பால் உணவுப்பொருட்களும் சென்னை அம்பத்துார் பால் பண்ணையிலும், ஊட்டியிலுள்ள பால் பண்ணைகளிலும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த புதிய உணவுப்பொருட்களை பால்வளத் துறை அமைச்சர் நாசர், நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் வரும் இருபதாம் தேதி, அறிமுகப்படுத்த இருக்கிறார்.
கலை.ரா
Comments are closed.