அறங்காவலர்கள் தேர்வு: நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By christopher

தெய்வபக்தி இல்லாதவர்களை கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது குறித்து அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், ”கடந்த விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி, அதன் காரணமாக அந்த கேள்வியை இடம்பெறச் செய்யவில்லை எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்தனர்.

மேலும் அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

நேருக்கு நேர் மோதிய விஜய்-அஜித் படங்கள் எவை?

ஜெய் ஷாவை டார்கெட் செய்த பாகிஸ்தான் தலைவருக்கு பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel