சென்னை மக்களே… அடுத்த புயல் குறித்து வெதர்மேன் விளக்கம்!

Published On:

| By Monisha

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது என்றும், கனமழை பெய்யும் என வெளியாகும் செய்திகளைப் பார்த்து சென்னை மக்கள் பயப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகி சென்னையை மிரட்டி சென்ற மிக்ஜாம் புயலின் காயங்கள் இன்னமும் ஆறாத நிலையில், அடுத்த புயல் செய்திகள் நிச்சயம் சென்னை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்தான். பலரும், என்ன சென்னைக்கு அடுத்த புயலா என வெறும் தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்து அச்சத்தில் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளத்தில், “தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு, உள் மாவட்டங்களுக்கு தொடர்ந்து மழை இருக்கும். சென்னை மக்களே… அரபிக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை எந்த வகையிலும் பாதிக்காது.

வெறும் தலைப்புச் செய்திகளையும் பிரேக்கிங் செய்திகளையும், வாட்ஸ்அப்பில் வரும் ஃபார்வர்டு மெசேஜ்களையும் பார்த்து பயப்பட வேண்டாம். இது அரபிக் கடலில்தான் உருவாகியிருக்கிறது. சென்னையை பாதிக்காது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: நீரிழிவாளர்களுக்கு பச்சரிசிக்கு பதில் புழுங்கலரிசிதான் நல்லதா?

அடுத்த வருஷம் போகலாம்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share