மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 101-வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) தமிழகம் முழுவதும் மகாகவி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, தமிழக அரசின் சார்பில் காமராஜர் சாலையில், மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள பாரதியாரின் உருவ சிலை மற்றும் அவரது புகைப்படத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மகாகவி பாரதியார் 1882-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார். 11-வயதிலிருந்தே இவர் கவிதைகள் எழுத தொடங்கினார்.
இவர் தனது கவிதைகள் மூலமாக மக்களுக்கு விடுதலை போராட்ட உணர்வை ஊட்டினார். பாரதியாரின் நூல்கள் அனைத்தும் 1949-ஆம் ஆண்டு தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்க மொழிகளில் புலமை பெற்றவர் பாரதியார்.

கலைஞர் ஆட்சியில் எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லங்களை நாட்டுடைமையாக்கப்பட்டு நினைவில்லமாக மாற்றப்பட்டது.
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக பாரதியார் உயிரிழந்தார்.
செல்வம்