கேலோ இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்துக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது.
கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கிய கேலோ இந்தியா போட்டிகள் தற்போது சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் முதலிடத்தை யார் தக்க வைத்துக்கொள்வது? என்பதில், இரண்டு மாநிலங்களுக்கும் கடும் போட்டி நீடித்து வருகிறது.

தற்போது தமிழ்நாடு 25 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா 26 தங்கப்பதக்கங்களுடன் முதல் இடத்திலும் உள்ளன.
இன்னும் ஒரு தங்கப்பதக்கம் தான் இடைவெளி என்பதால், மீண்டும் முதல் இடத்தை தமிழ்நாடு விரைவில் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நேற்று(ஜனவரி 25) நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என தமிழ்நாட்டின் இரண்டு அணிகளும் தங்கப் பதக்கம் வென்றன.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியில், நம் தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் சுகந்தன் கூடைப்பந்து ஆண்கள் அணியிலும், வீராங்கனைகள் சாதனா மற்றும் கிரிசோலின் ஆகியோர் பெண்கள் அணியிலும் சிறப்புறப் பங்களித்து தங்கம் பதக்கம் வென்று சாதனைப் படைத்திருக்கின்றனர். அவர்கள் இன்னும் பல… pic.twitter.com/VY2IG0NGfh
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 25, 2024
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளின் புகைப்படம் பகிர்ந்து தூத்துக்குடி மாவட்ட எம்.பி கனிமொழி அவர்கள் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”ஏழையா செத்தாலும்” பிக்பாஸ் போட்டியாளரின் திடீர் பஞ்ச்!
