எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமின்!

Published On:

| By christopher

சு.வெங்கடேசன் எம்.பி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு இன்று (ஜூன் 20) ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது சமூகவலைதள பக்கத்தில், ‘மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி கள்ள மெளனம் காக்கிறார்’ எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டே பொய்யான தகவலை பரப்பிய சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய மதுரை போலீசார், கடந்த 17 ஆம் தேதி இரவு பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை சென்னையில் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம் சங்கரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட எஸ்.ஜி. சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் எஸ்.ஜி. சூர்யாவை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதையடுத்து நேற்று  மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சூர்யா ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது சிறையில் உள்ள சூர்யாவை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மனுவையும் இன்றைக்கு (ஜூன் 20) விசாரிப்பதாக நீதிபதி பானு ஒத்தி வைத்தார்.

அதன்படி, இன்று எஸ்.ஜி. சூர்யாவின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாத்ததையும் கேட்ட நீதிபதி பானு எஸ்.ஜி. சூர்யாவுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி பானு உத்தரவிட்டார்.

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: அட்டவணை வெளியானது!

தமிழக ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன்: திமுக நிர்வாகி மிரட்டல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share