கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்

Published On:

| By Mathi

TN Assembly New

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (அக்டோபர் 14) முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை (அக்டோபர் 17) வரை நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டம் மொத்தம் 4 நாட்கள் நடைபெறும்.

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றம் இன்று காலை கூடியதும் கரூரில் உயிரிழந்த 41 பேர் உள்ளிட்ட மறைந்த இந்நாள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

6 மாதங்களுக்கு பிறகு கூடியுள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தில் 41 பேர் பலியான கரூர் கொடுந்துயரம் மற்றும் 22 குழந்தைகள் மரணத்துக்கு காரணமான கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்டவைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share