தமிழ்நாட்டுடன் தொடர்புடைய கடல் சார்ந்த தொல்லியல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒரிசா பாலு இன்று (அக்டோபர் 6) காலமானார். அவருக்கு வயது 60.
வாய் பகுதியில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
குமரி கண்டம், லெமூரிய கண்டம், கடல் கொண்ட தென்னாடு, தென் புலத்தார் தொடர்பான ஆய்வுகளில் ஒரிசா பாலு ஈடுபட்டு வந்தார். இவரது இயற்பெயர் சிவஞானம் பாலசுப்பிரமணி.
திருச்சி உறையூரில் பிறந்த இவர் கடலியலில் தமிழரின் தொன்மையான வரலாறு தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுவந்தார்.
ஆமைகள் மூலமாக நீரோட்டத்தை அறிந்து பழங்கால தமிழ் மக்களின் தொன்மையான கடல்வழி பயணம் மேற்கொண்டதை அறிந்தவர் ஆவார். சமீபமாக புற்றுநோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஒரிசா பாலு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Asian Games: தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா!