ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ பாடல் மற்றும் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்த நடிகை தமன்னாவிற்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் தமன்னா நடித்திருந்தார். அந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணத்தினால் அந்த படம் தள்ளிப்போனது. தற்போது தமன்னா, வேதா மற்றும் ஸ்திரீ 2 ஆகிய இரண்டு ஹிந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், சமீப காலமாக நடிகை தமன்னா அடிக்கடி ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு தமன்னா தனது குடும்பத்தோடு சென்று வழிபாடு செய்துள்ளார்.

இந்த ஆன்மிக பயணத்தில் எடுக்கப்பட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்ட தமன்னா, ’எனது அன்புக்குரியவர்களுடன் புனிதமான தருணங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
”நிதிஷ்குமார் பிரதமர் ஆக வாய்ப்புள்ளது… ஆனால்” : அகிலேஷ் யாதவ்
