மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 13 – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 13 – உதய் பாடகலிங்கம்

மிகச் சரியான விஷயங்கள் துண்டு துண்டாக இருக்க, தவறுகள் எப்போதும் கூட்டணி அமைத்துக்கொள்கின்றன. இதனால், ஒரு தவறு மற்றொன்றை வெளிக்கொணர்கிறது. அது இன்னொன்றோடு இருந்த தொடர்பைக் காட்டுகிறது. பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் தண்டனை பெற்ற பிறகு, தேரா தலைமையகம் பற்றி தினமொரு திகில் செய்தி வெளியாகிறது.

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 12 -உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 12 -உதய் பாடகலிங்கம்

ஆனால், குர்மீத் சிங் கைதான பிறகும், தேரா பக்தர்களின் மனநிலையில் பெரிய மாற்றமில்லை என்கின்றன வட இந்திய ஊடகங்கள். பலவீனமானவர்களை எளிதில் சாய்க்கும், குயுக்தி நிரம்பியவர்கள் தங்கள் வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் ஒற்றை விஷயம் இதன் பின்னிருக்கிறது. அதன் பெயர் விசுவாசம்.

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 11 – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 11 – உதய் பாடகலிங்கம்

எந்தவொரு விஷயத்திலும் அவசரப்படும்போது, எப்போதும் அசலைவிட நகலே நம் கைக்கு அருகில் இருக்கும். கடவுளை நெருங்கக் குறுக்குவழி தேடுபவர்களின் கண்களில் நகல்கள் தென்படுவதில்லை; போலிகளே அகப்படுகின்றன. இரண்டு நாள்களுக்கு முன்பு, அலகாபாதில் உள்ள அகில இந்திய அகாரா பரிஷத் எனும் அமைப்பு முக்கியமான போலிச் சாமியார்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இடம்பெற்றிருக்கும் 14 பேரில் குர்மீத் ராம் ரஹீமும் ஒருவர்.

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 9 – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 9 – உதய் பாடகலிங்கம்

தன்னைத் தானே மிகவும் நேசித்துக்கொள்பவர் நார்சிஸிஸ்ட் என்றழைக்கப்படுகிறார். இப்படிப்பட்டவர்கள் தனக்கும் தன்னுடைய ஆசைகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள். கிரேக்கப் புராணங்களின்படி, மிகுந்த அழகுடைய நார்சிஸ் என்பவன் தன்னைப் பற்றி நிரம்பப் பெருமிதம் கொள்கிறான். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. இப்படியிருப்பவன், ஒருநாள் தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தைப் பார்த்து காதல்கொள்ள… கிரேக்கக் கடவுள்கள் அவனைத் தண்டித்ததாக நீளும் கதை. நார்சிஸின் இடத்தில் குர்மீத் சிங் போன்ற எவரையும் பொருத்திப் பார்க்கலாம். ‘என்னைப் பின்பற்று’ என்று சொல்பவர்களில் முக்காலே சொச்சம் பேர் இந்த ரகம்தான்.

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 10 – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 10 – உதய் பாடகலிங்கம்

வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லை என்று நினைப்பவர்களில் பலர், தங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த வாசகங்களை எல்லாம் கல்வெட்டில் பொறித்து காவல் காப்பார்கள் இவர்களது அடிவருடிகள். மனிதர்களின் மனதை வாசிக்கும் திறன் கொண்டவரான குர்மீத், இதையும் நன்கு உணர்ந்திருக்கிறார் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஆதலால்தான், அவரால் தனது வார்த்தைகளுக்கு எதிரான வாழ்வை மிகத் திறமையாக மேற்கொள்ள முடிந்திருக்கிறது.

மினி தொடர் : யார் இந்த ராம் ரஹீம்? 8 – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர் : யார் இந்த ராம் ரஹீம்? 8 – உதய் பாடகலிங்கம்

கல்வி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதுதான் மூலம் இந்த தேசத்தில் மக்களின் அபிமானத்தை எளிதாகச் சம்பாதிக்கலாம். அதன் வழியே, தங்களுக்கான ஆதாயத்தைத் தேடிக்கொள்ளலாம். இதில் தனிநபர்கள், அமைப்புகள் என்று எந்த வித்தியாசமும் இல்லை. தேராவின் நலப்பணிகள்தான், இன்று அதன் பக்தர்களின் எண்ணிக்கையை ஆறு கோடியாக உயர்த்தியிருக்கிறது. குர்மீத்தின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையை, அவரைப் பின்பற்றும் பல லட்சம் மக்களின் மனதில் உண்டாக்கியிருக்கிறது. ஒரு திசையில் ஆதரவு பெருகினால், இன்னொரு திசையில் எதிர்ப்பு துளிர்ப்பதுதானே இயற்கை?

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? – 7 – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? – 7 – உதய் பாடகலிங்கம்

2007ஆம் ஆண்டில் நடந்த விசாரணையின் பலன், 2017ஆம் ஆண்டுதான் தெரிந்திருக்கிறது. இரு பெண்களுக்கும் நீதி தாமதமாகக் கிடைத்ததன் பின்னணியில் வலுவாக இருப்பது, குர்மீத் சிங் திட்டமிட்டு வளர்த்துக்கொண்ட அவரது அரசியல் செல்வாக்கு.

|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? – 6 – உதய் பாடகலிங்கம்

ஆங்கிலத்தில் ‘ODD MAN OUT’ என்று சொல்வார்கள். தனித்துத் தெரிதல் என்று இதற்குப் பொருள். தனித்துத் தெரியும் இயல்புகொண்ட சில மனிதர்கள், சமூகத்தில் தங்களை ODD MAN ஆகக் காட்டிக்கொள்வார்கள். எங்கும் எதிலும் வித்தியாசம் என்பது இவர்களது பாலிசி. அப்படியொருவராகத்தான், ஆரம்பத்தில் இருந்தே தன்னை வெளிப்படுத்திக்கொண்டார் குர்மீத். அதனால்தானோ என்னவோ, காவிக்குப் பதிலாக கலர்புல் காஸ்ட்யூம்களில் வலம்வந்தார். ஆடம்பரமான கார்களில் வந்திறங்கி, எளிமையைப் பற்றி மக்களிடையே பிரசங்கம் செய்தார். ‘இலக்கணம் மாறுதோ’என்று பாட்டுப் பாடாத குறையாக, அதைச் சிலாகித்தனர் மக்கள். இதனால் சிர்ஸா தலைமை ஆசிரமம் ரகசியக்கூடமாக மாறியதை எவரும் கண்டுகொள்ளவில்லை.

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5 – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 5 – உதய் பாடகலிங்கம்

மனித உருவிலான கடவுளுக்கு ‘சத்குரு’ என்று பெயர். குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் ‘தேரா சச்சா சவுதா’ பற்றிய தேடலின்போது, நமக்குக் கிடைக்கும் பதில்களில் இதுவும் ஒன்று. மஸ்தானா ஜி மற்றும் ஷா சத்னாம் சிங்குக்குப் பிறகு, சச்சா சவுதாவின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தவர் குர்மீத். அதனால், அவர்கள் பெற்ற அதே மரியாதையை குர்மீத்துக்கும் தந்தனர் தேராவின் பக்தர்கள். தொன்றுதொட்டு வந்த வழக்கத்தை மீறாமல், அவரது செயல்பாடுகளை அனைவரும் போற்றினார்கள். எவரும் சிறிதளவும் விமர்சனம் செய்யவில்லை. அது சரி, சரணம் என்று பணிந்தவரின் மனம் எப்படி எதிர்க்கருத்தை வெளியிடும்? ஆதலால், 1990 செப்டம்பர் 23ஆம் தேதி முதல் குர்மீத்தின் சாம்ராஜ்யம் செயல்படத் தொடங்கியது என்று தாராளமாகச் சொல்லலாம்.

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4 – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 4 – உதய் பாடகலிங்கம்

ஆன்மிகப் பீடங்களுக்கும் அதிகார மையங்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு விடை காண முடிந்தால், கடவுளின் தூதுவன் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்பவர்களை நம்மால் விலக்க முடியும். ஆனால், யதார்த்தம் வேறாக இருக்கிறது. ஓரிடத்தில் மக்கள் கும்பலாக நிற்பதைக் கண்டால், நடுவில் இருப்பவர் யார் என்றுதான் கண்கள் தேடுகின்றன. கூட்டத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு, இதுவே சாதகமாக இருக்கிறது.

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3 – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 3 – உதய் பாடகலிங்கம்

குர்மீத் ராம் ரஹீமின் பின்னால், பெருமளவில் மக்கள் திரள்வது ஏன்? கடந்த 20 ஆண்டுகளில் தேரா சச்சா சவுதாவின் அரசியல் முக்கியத்துவம் அதிகமானது எப்படி? இதற்கான பதில் தெரிய வேண்டுமானால், வடமாநிலங்களில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானிலுள்ள தலித் மக்களின் வாழ்க்கையை அறிய வேண்டும்.

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2  – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2 – உதய் பாடகலிங்கம்

பிறக்கும்போதே இங்கு எவரும் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதில்லை. இது சாமியார்களுக்கும் பொருந்தக்கூடியது. ஒருவரது சூழலும் சுற்றமும்தான், சம்பந்தப்பட்டவரை சாமியாராக வளர்த்தெடுக்கிறது. இதில் நாடு, மதம், இனம் என்று எந்தப் பாகுபாடும் இல்லை. ஆனால், ஒரு சாமியாரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நூறில் தொடங்கிக் கோடிகளாகப் பெருகும்போது, அவரைப் பற்றிய கதைகளுக்குக் கால்கள் முளைக்கின்றன. பிறக்கும்போதே தொப்புள் கொடிக்குப் பதிலாக, ஒளிவட்டம் நிறைந்திருந்தது என்று பேச்சுகள் வலுப்பெறத் தொடங்குகின்றன.

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1 – உதய் பாடகலிங்கம்
|

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1 – உதய் பாடகலிங்கம்

பிரியாணி பொட்டலம், அழைத்துவர வாகனம், கைச்செலவுக்குப் பணம், இது மட்டுமில்லாமல் ஊரையும் சுற்றிப் பார்க்கலாம் என்ற வாக்குறுதியைத் தந்தால்கூட, இன்று அரசியல் மாநாடுகளுக்குக் கூட்டம் வருவதில்லை. மாநிலம், கட்சிகள், அரசியல் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, தன்னை நல்லவன், வல்லவன், வீரன், சூரன், வள்ளல், வரலாற்று நாயகன் இத்யாதி என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் எவரும், இப்போதைய நிலையில் கையிலிருக்கும் காசைக் கரைக்காமல் கூட்டம் சேர்க்க முடியாது. இவர்களது பொறாமையை ஒட்டுமொத்தமாகச் சம்பாதித்திருக்கிறார் ஒரு நபர். இவர், ஒரு வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளியும்கூட. ‘தேரா சச்சா சவுதா’ என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்தான் இந்த மனிதன்.