மோடிக்குத் திரண்ட கூட்டம்: டெல்லிக்கு போன ரிப்போர்ட்!
இந்த பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் சேர்க்க வேண்டிய பொறுப்பு விழுப்புரம் பெருங்கோட்டப் பொறுப்பாளரான மாநில செயலாளர் வினோஜ் பன்னீர் செல்வத்திடம் அளிக்கப்பட்டது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டவர் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனபோதும் மாவட்ட தலைவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்த வினோஜ்… ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு டிஸ்சார்ஜ் ஆகி மருத்துவமனையில் இருந்து நேரடியாக பல்லாவரம் மைதானத்துக்குதான் சென்றார். அங்கே ஏற்பாடுகளை பார்வையிட்டு விட்டு கூட்டம் திரட்டுவது பற்றி ஆலோசனை நடத்தினார்.