நெரிசலில் சிக்கி பலியான பெண்கள்: நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்

இந்நிலையில், பலியான பெண்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா இரண்டு இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

உயிரிழந்த 4 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக! – அன்புமணி

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்