கஞ்சாவை எலி தின்னுடுச்சு: காவல்துறையின் பதிலால் ஷாக்கான நீதிமன்றம்!

மதுரா காவல்நிலைய அறைகளில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிகள் கிலோக்கணக்கில் இருந்த கஞ்சா அனைத்தையும் தின்றுவிட்டதாகவும், எனவே 581 கிலோ கஞ்சாவை ஆதாரமாக சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் பதில் அளித்துள்ளனர். இதேபோல் 2017 ஆம் ஆண்டு பீகார் மாநில காவல்துறை பறிமுதல் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்து காலி செய்துவிட்டதாக பரபரப்பு புகாரை தெரிவித்திருந்ததும் ஜார்கண்ட் மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட போதும் எலிகள் கிட்டத்தட்ட 45 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்