Protest till withdrawal of Vishwakarma scheme

‘விஸ்வகர்மா’ திட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டம்!

குலத்தொழிலை வலியுறுத்தும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து, சமீபத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் கூறியுள்ளார்.