’’தோனியை அழவைத்த சென்னை அணி”: மனம் திறந்த ஹர்பஜன் சிங்
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போட்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், “ இரவு நேர உணவுக்காக நான் அனைவரும் குழுமியிருந்தோம். பொதுவாக ஆண்கள் அழுவதில்லை என்று நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அன்று இரவு தோனி அழுதார். அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். யாருக்கும் அது தெரியாது” என்று சொன்ன ஹர்பஜன் சிங் மற்றொரு வீரரான இம்ரான் தாஹிரிடம் நான் சொல்வது சரிதானே தாஹிர் என்று கேள்வி எழுப்ப…ஆம் என தெரிவித்த தாஹிர்”நானும் அங்கு இருந்தேன். அவரைப்பார்த்து நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். தோனியை அப்படி பார்த்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் உணர்ந்தேன். அவர் அந்த அணியை தன்னுடைய குடும்பத்தை போல் கருதுகிறார். அந்த தருணம் எனக்கு உணர்வுப்பூர்வமான தருணமாக காணப்பட்டது” என்று இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்